அழைத்துப் பேசிய அரைமணி நேரத்திற்குள்ளாக மொத்தக் குடும்பமும் சேப்பாக்கம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டனர்.
"என்னைக் கண்டவுடன் மாமா என்று கத்தியபடித் துள்ளிக்குதித்து ஓடியாந்து, ஒரே துள்ளலில் என் கைகளில் வந்தடைன்தவள். கன்னத்தில் முத்தங்கள் கொடுத்துச் சிரித்தாள்."
"இவள்தான் இப்படியென்றால், அவள் தம்பி குட்டிப்பையன் அறிவோ அதற்கு மேல் இருக்கிற நான்கு பற்களைக் காட்டிய படியே அம்மாவின் கையிலிருந்து தாவி 'அக்கா மாமா, அக்கா மாமா' என்று சொல்லிக் கொண்டே என்னிடம் வந்தான். யாழினியை இறக்கிவிட்டு அவனை வாங்கியதும் அக்காவைப் போல இவனும் முத்த மழை."
அதுவென்ன அக்கா மாமான்னுக் கேட்க, அக்கா என்னை மாமா என்று அழைப்பதால் அவனுக்கு நான் அக்கா மாமாவாம்.
அதன் பின்னர் அனைவரும் கடற்கரைப் போகலாமென முடிவெடுக்க. " அப்பா, நீங்க அம்மாவையும், தம்பியையும் வண்டியிலக் கூட்டிட்டுப் போங்க, நான் மாமாவோட நடந்து வருகிறேன்." , எனச் சொன்னவளைக் கைப் பிடித்து அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன்.
மாமா எனத் துவங்கிப் பேச ஆரம்பித்தவள். " தம்பி, கல்லால் என் மண்டைய ஓடச்சிட்டான்" , " ஸ்கூல் மாறப் போறேன்" , "தம்பி ரொம்ப அடம்பிடிக்கிறான், அதனால அவனப் பால்வாடிலச் சேக்கப் போறாங்க" , " அப்புறம் அம்மா நீங்க சொன்ன மாதிரி மீன் குழம்பு வச்சி கொடுத்தாங்க" என அடுக்கடுக்காகப் பலவற்றைச் சொல்லிக் கொண்டே வந்தவள் போன தடவ போன் பண்ணுனப்ப ஊருல இருக்கேன்னு சொன்னீங்களே!... எந்த ஊருக்கு போயிருந்தீங்கன்னுக் கேள்வி கேட்க ஆரம்பிக்க.
நானும் கடந்த இரு மாதங்களில் எங்கெல்லாம் சென்றேனோ அனைத்தையும் ஒன்று விடாமால் சொல்லிக் கொண்டிருக்கும் போது பாலா அவர்களை இறக்கி விட்டு விட்டு எங்களை அழைக்க வந்து விட்டார்.
கடற்கரைச் சென்றவுடன், குட்டிபையன் அறிவிடம் என்னடாப் பையா பால்வாடிப் போகபோறியாமே என்றதும் சிரித்துக் கொண்டே.... ஈ...ஈ...ஈன்னுத் தலையாட்டினான்"
உன் வயசு என்னடான்னுக் கேட்டதற்கு "தென்ற"ன்னுப் பதில் சொல்ல, நான் அதற்குள்ளவெல்லாம் பள்ளிக்குச் செல்லவும் வேண்டாம், அனுப்பவும் வேண்டாமென்று பாலாவிடம் சொல்லிய வாரே கடற்கரையினுள் சென்றோம்.
உள்ளே சென்றவுடன் ஓடி - பிடித்துத் துவங்கி, கிச்சிகிச்சித் தாம்பூலம் வரை பல விளையாட்டுகளை விளையாடியும் மணலில் ஆட்டம் போட்டும் குதுகலமாக இருந்துவிட்டுக் கிளம்பும் போது யாழினியின் அம்மா சொன்னா விசையம்தான் நேற்றைய மாலையை அழகாகியதொடு மட்டுமல்லாமல் ஏதோ, நாம சரியாதான் போயட்டிருகிறோமுன்னு நினைக்கத் தோன்றியது.
“தினமும் யாழினிக்கு கதைச் சொல்ல வேண்டுமாம். அப்படிக் கதைச் சொல்லும் போது கதையின் நாயகனாக இனியன் என்ற பெயர் இருக்க வேண்டுமாம். அந்தப் பெயர் இல்லையென்றால் பாப்பா கதையே கேட்பதில்லை. உங்களுடன் பேச ஆரம்பித்த பின்பு ரொம்பவே மாறியிருக்கா, பேச்சில், செயலில் கொஞ்சம் தெளிவாயிருக்கா. மாமா மாதிரி நிறையப் புத்தகம் படிக்கணுமுன்னு சொல்லுறா, உங்களை வச்சிக் கதைச் சொல்ல எனக்கும் போர் அடிக்குது அதனால எனக்குப் போர் அடிகிறப்ப போன் போட்டு தாறேன் இனிமே நீங்களே சொல்லிக்கோங்க” என்றெல்லாம் அவங்க சொல்லச் சொல்ல மௌனமான புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்து கொண்டியிருந்தேன்.
ஆனால், உள்ளுக்குள் போய்க்கொண்டிருக்கும் பாதையில் சரியாகத்தான் போய்கொண்டிருகிறோம் என்ற எண்ணமும், கூடவே அதீதப் பயமும், பொறுப்புடனும் இருக்க வேண்டும் போல என்கிற எண்ணம்தான் ஓடிக் கொண்டிருந்தது/ கொண்டிருகிறது.
அதற்குள்ளாக, பாலா ஆளுகொரு அவித்த சோளக் கருத்துகளுடன் வந்து நிற்க. அனைவரும் சாபிட்டுக்கொண்டேயிருக்கும் போது, யாழினி “ அப்பா நீயொரு மஷ்ரூம் காளான்” எனச் சொல்லிச் சிரித்தாள். நான் என்னவென்று கேட்க.
அன்றொருநாள் குடும்பத்துடன் அனைவரும் எங்கேயோ சென்றிருகின்றனர். அப்போது பாலா சூப் கடைக்குச் சென்று மஷ்ரூம் சூப் ஒன்னு, காளான் சூப் ஒன்னுன்னு அவையிரண்டும் ஒன்றென்று தெரியாமல் ஆர்டர் கொடுக்க. சப்லேயர் சிரித்துக் கொண்டு இரண்டும் ஒன்றுதானே எனக் கேட்க அன்று முதல் இவள் அப்பாவை நீயொரு மஷ்ரூம் காளான்னு கூப்பிட ஆரம்பித்திருக்கிறாள். உங்களுடன் பழகிய பிறகுதான் இனியன் இவளிடம் இதுபோன்ற கலாய்த்தல் விசையமெல்லாம் ஆரம்பித்திருக்குன்னு பாலா என்னிடம் சொல்ல. சற்று நேரத்திற்கு முன் யாழினியின் அம்மா சொன்னது நினைவுக்கு வர. பேந்தபேந்த முழித்துக் கொண்டே கலாயித்தலெல்லாம் இல்லையின்னா வாழ்க்க நல்லா இருக்குமான்னுக் கூறிக் கொண்டே அவளைத் தூக்கிக் கையில் வைத்துக் கொண்டேன்.
அப்போது, நாங்கள் நின்றிருத்த இடத்திற்கு நேராக ஒருவர் இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தினார். அதில் தற்கால அரசியல் தளபதியின் புகைப்படம் ஒட்டியிருந்தது. அதைப் பார்த்ததும் மு.க.ஸ்டாலின் போட்டோ ஓட்டிருக்காங்க என்றால். நான் ஆச்சரியமாக இவரையெல்லாம் தெரியுமா? எனக் கேட்க... காரல் மார்க்ஸ், லெனின் முதல் தற்கால மோடி, சீமான் வரை அனைவரது புகைப்படங்களையும் அடையாளம் சொல்கிறாள் எனச் சொன்னவுடன், நம்ம வார்ப்பு இப்படியில்லை என்றால் தான் சிக்கல் எனச் சொல்லிக் கொண்டே கிளம்பினோம்.
கிளம்பும் போதும், கட்டிபிடித்து இருவரும் மாறிமாறி முத்தமிட்டுச்செல்ல நான் தான் சற்றுப் பெருமைபட்டுக் கொண்டிருகிறேனா? அல்லது பயந்துக் கொண்டிருகிறேனா? என்று புரியாமல் தற்போது வரை குழம்பிய நிலையில் இருக்கிறேன். ஒரு குழந்தை என்னை அவள் உலகின் கதாநாயகனாகப் பாவித்து வருகிறாள் என்பதை எண்ணி. இருப்பினும் அவற்றையெல்லாம் மீறி ஒருவித அமைதிக் கலந்தப் புத்துணர்வும் இது போதுமென்ற மனநிலையுமே ஏற்பட்டிருகிறது.
#இனியன்
No comments:
Post a Comment