நம்பிக்கை என்பது எது? என்ற கேள்வி பலமாகப் பல காலங்களாக மனதில் எழுந்த வண்ணமே இருகிறது.மாறி வரும் வாழ்க்கை முறையில் நம்பிக்கைகளும் மாற்றம் பெற்ற வண்ணமே இருந்தும் வருகிறது.
பொதுவாகப் பெண்களுக்கு ஏற்படாத அல்லது தாக்காத தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட சகோதிரிகளான வானவன் மாதவி மற்றும் இயல் இசை வல்லபி.தங்களது வாழ்வினைத் தங்களுக்கானதாக எந்தளவிற்குக் கட்டமைத்துப் போராடிட முடியும் என்று எண்ணிக்கொண்டு முடங்கிக் கிடக்கும் நிலையில் உள்ளோர்களுக்கான மாற்று சக்தியாக வெளிவந்து “ஆதவ் அறக்கட்டளை”யைத் துவக்கி தங்களைப் போன்றோர்களுக்கான மறுவாழ்வுக்கான இடத்தையும் ஏற்படுத்துக்கிக் கொண்டிருகிறார்கள்.அதன் விளைவாக “கீதா இளங்கோவன்”மூலமாக வெளி வந்ததுதான் இந்த “நம்பிக்கை மனுசிகள்” என்ற ஆவணப்படம்.
இதில் அவர்கள் தசைச் சிதைவால் பாதிப்புக்குள்ளான நிமிடத்திலிருந்து தங்களது வாழ்க்கையைப் பகிர ஆரம்பித்து,வலிகளைக் கடந்து தாங்கள் கட்டமைத்துக் கொண்ட வாழ்வில் எவ்வாறு பயணமாகி வெற்றியடைந்து கொண்டிருகிறோம் என்பது வரையான பதிவுகளைப் பதிந்துள்ளனர்.
மாதவிடாய்க் காலங்களில் மற்ற பெண்களை விடத் தாங்கள் எந்தளவிற்குப் பாதிப்புல்லாகிறோம் என்று விளக்கம் தரும் இடத்தில் படம் பார்ப்பவர்களின் மனதில் ஒருவித இனம் புரியாத மாற்றத்தை ஏற்படுத்தி விட்டுதான் போகிறது.
அதேநேரம் இது போன்ற நோய்கள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பதில் துவங்கி,அதன் காரணங்களான இயற்கைக் கொல்லி மனிதர்களையும், மருந்துகளையும், பணத்திற்காக அவற்றை உருவாகிக் கொண்டிருக்கும் கார்பரேட் நிறுவனகளையும் சாடும் இவர்கள்.தங்கள் தேவைகளுக்கெனக் கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து நிதிப் பெறுவதில்லை என்பதைக் கொள்கைகளாக வைத்திருப்பதாகச் சொல்லும் இவர்கள் எந்தளவிற்குத் தங்களின் இந்நிலைக்கான காரணத்தை ஆழ்ந்த ஆய்வுச் செய்துள்ளார்கள் என்று தோன்ருக்கிறது . ஆனால்இந்நோய் இயற்கைக் கொல்லிகளால் மற்றுமின்றி நெருங்கிய உறவுமுறை திருமணங்களாலும் இந்நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதையும் பதிவுச் செய்திருக்கலாம்.
மேலும் இதுபோன்றவர்களின் பெற்றோரை நான் அதிகம் கண்டுக் கொண்டிருகிறேன். அவர்கள் அவர்களின் குழந்தைகளுக்குக் கற்றுத்தராத விசையத்தை இவர்களின் பெற்றோகள் இவர்களுக்கு அழித்திருகின்றனர். இன்னும் ஒரு பதினைந்து நிமிடம் படம் நீண்டிருந்தாலும் சரி அவர்களைப் பற்றி விவரித்திருந்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் ஒரு விழிப்புணர்வாகவும் ஊக்கமாகவும் அமைந்திருக்கும்.
மொத்தத்தில் நம்பிக்கையைத் தேடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இதோ பாருடா நம்பிக்கை என்று பறைச் சாற்றும் விதமாக அமைத்திருக்கும் ஆவணப்படம் தான் இந்த “நம்பிக்கை மனுசிகள்”.இவர்களின் முயற்சிக்கு அனைவரும் தலை வணங்கித் தன்நலம் கருதாது உதவிட வேண்டும் என்பதே எனது ஆவா.....
No comments:
Post a Comment